Thursday, March 12, 2026
HomeUncategorizedதிருவண்ணாமலையில் இன்று சித்ரா பவுர்ணமி - பக்தர்கள் கிரிவலம்....

திருவண்ணாமலையில் இன்று சித்ரா பவுர்ணமி – பக்தர்கள் கிரிவலம்….

திருவண்ணாமலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இவ்வாண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் செல்ல தொடங்கிவிட்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.அவைகள் நகர எல்லையில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர் 

பக்தர்கள் இந்த கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

2 ஆண்டுக்கு பின்னர் சித்ரா பவுர்ணமி விழா களை கட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் வியாபாரமும் களை கட்டியுள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Thiruvannamalai Girivalam | Girivalam | Thiruvannamalai | Arunachaleswarar Temple | Pournami | பவுர்ணமி | திருவண்ணாமலை கிரிவலம் | கிரிவலம் | திருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் கோவில்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments