Home Uncategorized தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ள பாதிப்பு இருப்பதால், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை உதவி கோரப்பட்டுள்ளது. 

சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தென் மாவட்டங்களில் உணவு பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்களில் உள்ள பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. 

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 62 செ.மீ ‘மழை பெய்துள்ளது.

Exit mobile version