திரையரங்குகள் 50 % பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தலைவி படம் இன்னும் வரும் 10 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. ஆனால், இந்த படம் ஒரு சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தியேட்டரில் வெளியாகும் படங்கள் குறைந்த பட்சம் 4 வாரங்களுக்கு பிறகு தான் ஒடிடிக்கு செல்ல வேண்டும் என்பதில் தியேட்டர் உரிமையாளர்கள் திட்டவட்டமாக உள்ளனர்.
