மகளிர் தினத்தையொட்டி தெலங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனுடன் ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜாவும் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத் ஆளுநர் மாளிகைக்கு சென்ற நடிகை ரோஜா, அங்கே ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனுடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

