Home Uncategorized தமிழ்நாடு முழுவதும் 4-வது மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது

தமிழ்நாடு முழுவதும் 4-வது மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது

இன்று தமிழகம் முழுவதும் 4-வது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 25 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் இன்று 1,600 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version