யுகங்கள் மாறினாலும், நாகரீகம் மாறினாலும் மக்களுக்கு தன்னுடைய இருப்பினை அவ்வப்போது தெய்வசக்தி உணர்த்திக்கொண்டே இருக்கிறது. இதற்கு இடம், பொருள் என்று ஏதுமில்லை. ஆனாலும் மக்கள் வணங்கிவரும் தலங்களில் உள்ளுறையும் இறைசக்தி பல நேரங்களில் அற்புதங்களை செய்கின்றன.
அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் தஞ்சை மாரியம்மன் கோயில்.
முற்காலத்தில் வயல் சூழ் பகுதியின் ஊடே அடர்ந்த புன்னைவனக் காடு அமைந்திருந்ததால் அவ்வூர் புன்னை நல்லூர் என இன்றளவும் தொன்மை மாறாமல் என்றழைக்கப்படுகிறது.
