சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாள போல்ட் நட் கழற்றப்பட்டிருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த இளைஞரை ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் போல்ட் நட்டுகளை கழற்றியது தொடர்பாக ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
