இந்திய பங்குச்சந்தைகள் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 721 புள்ளிகள், அதாவது 0.88 சதவீதம் சரிவடைந்தது, 81,463 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 225 புள்ளிகள், அதாவது 0.90% சரிவடைந்தது. 24,837 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.
இரு பங்குச்சந்தைகளிலும் கலந்து ஒரு மாதத்தில் இதுதான் குறைவான புள்ளிகள் ஆகும்.

