Home வானிலை நாளை முதல் மாறும் வானிலை.. தமிழகத்தில் மழை எச்சரிக்கை!

நாளை முதல் மாறும் வானிலை.. தமிழகத்தில் மழை எச்சரிக்கை!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவி வரும் காற்று அடுக்கு சுழற்சி மற்றும் சாதகமற்ற வளிமண்டல நிலைமைகள் காரணமாக, இப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இடியிறங்கல் மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

நாளை முதல் வானிலை நிலவரங்கள் படிப்படியாக மாறி, தென்மேற்கு பருவமழைக்கான சாதகமான சூழல் உருவாகத் தொடங்கும்.

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்றும் கூட பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, மாலை வேளையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Exit mobile version