Monday, March 16, 2026
HomeUncategorizedபுதுக்கோட்டை கம்பன் 50ஆம் பொன் விழா : மாணவ-மாணவியர் இடையே ஓவியம் பேச்சு போட்டிகள் நடைபெற்றன

புதுக்கோட்டை கம்பன் 50ஆம் பொன் விழா : மாணவ-மாணவியர் இடையே ஓவியம் பேச்சு போட்டிகள் நடைபெற்றன

புதுக்கோட்டை கம்பன் கழகம் 50 ஆம் பொன் பெருவிழா போட்டிகள் இன்று வைரம்ஸ் பள்ளியில் நடைபெற்றது. 500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் ஓவியம், பேச்சு , கம்பராமாயணப் பாடல்கள் ஒப்பித்தல் ஆகிய போட்டிகளில் பங்குபெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் 18 .7.25 முதல் 27.7.25 வரை நடைபெற உள்ள கம்பன் கழக  பொன் பெருவிழாவில் 25.7.25 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பரிசளிப்பு நிகழ்வில் வழங்கப்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

மேலும், கம்பன் கழகத்தலைவர் திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கம்பன் கழக நிர்வாகிகள்,  மாணவ மாணவியர், பெற்றோர்கள், ஆசியர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments