Home செய்திகள் 14 மணி நேரத்தில் 2 கொடூரக் கொலைகள்… சென்னையில் பதற்றம்!

14 மணி நேரத்தில் 2 கொடூரக் கொலைகள்… சென்னையில் பதற்றம்!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் விதமாக, வெறும் 14 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கொடூரக் கொலைகள் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி புதுநகர் பகுதியில் பிரசாந்த் என்ற வாலிபர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்குள்ளேயே, அடுத்த சில மணி நேரங்களில் விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான விஜய் என்ற இளைஞரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்துள்ளது.

குறுகிய கால அவகாசத்திற்குள் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த இரு வேறு கொலைச் சம்பவங்கள் குறித்து சென்னை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைப் பிடிப்பதற்காகத் தனிப்படைகளை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்; அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்தத் தொடர் கொலைச் சம்பவங்கள் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன

Exit mobile version