சென்னை ராயப்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் மரணம் அடைந்தார்.
இது குறித்த வழக்கு விசாரணையில், அந்த மறுவாழ்வு மையம் உரிமம் இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், உரிமம் பெறாமல் போதை மறுவாழ்வு மையம் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மனநல ஆணையம் தெரிவித்துள்ளது.

