ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்தால் அவை தாக்கி அழிக்கப்படும் என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையைக் ‘கடற்கொள்ளை’ என வர்ணித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம், அமெரிக்காவின் இத்தகைய சட்டவிரோதப் போக்கினால் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் எனக் எச்சரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துள்ள இந்த நேரடி மோதல் போக்கு, வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதோடு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
