Home Uncategorized வாட்டர் ஹீட்டரை’ OFF செய்து விட்டு குளிக்க மின் வாரியம் வேண்டுகோள்

வாட்டர் ஹீட்டரை’ OFF செய்து விட்டு குளிக்க மின் வாரியம் வேண்டுகோள்

வீடுகளில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும் பொதுமக்கள், தண்ணீர் சூடேறியவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிக்குமாறு மின்வாரியம் வேண் டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது பனிக்காலமாக இருப்பதால் தண்ணீர் சூடேற்றும் வாட்டர் ஹீட்டர் இயந்திரத்தை பாதுகாப்பாகவும், கவமாகவும் பொதுமக்கள் கையாள வேண்டும்.

வாட்டர் ஹீட்டர் இயந்திரத்தை இயக்கத்தில் வைத்துக்கொண்டு குளிக்க வேண்டாம். மேலும் நீர் வெப்பநிலையை அடைந்தவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிப்பது பாதுகாப்பானது.

வாட்டர் ஹீட்டரை அணைக்காமலேயே குளிக்கும்போது பல நேரங்களில் மின் விபத்து ஏற்படுகிறது.

மேலும் அனைவருடைய இல்லங்களிலும் உயிர் பாதுகாப்பு சாதனத்தை (RCCB) அமைத்து தங்கள் குடும்ப உறவுகளை பாது காக்க கேட்டுக்கொள்கிறோம்.

Exit mobile version