வெளிமாநில ஆம்னி பேருந்துகளை திங்கள் வரை இயக்க அவகாசம்.
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை ஜுன் 17ஆம் தேதி வரை இயக்க கால அவகாசம் அளித்து போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்கக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
வாரயிறுதி மற்றும் பக்ரீத் பண்டிகையை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை அனுமதி. தமிழ்நாட்டில் 547 வெளிமாநில பதிவு எண் கொண்ட சுற்றுலா பேருந்துகள் வீதிகளை மீறி இயங்குவதாக புகார்.
