வேலியே பயிரை மேய்வது போல், காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது – சென்னை ஐகோர்ட் கருத்து தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் பறித்த வழக்கு.
சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமின் கோரி மனு. வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என காவல்துறை தரப்பில் வாதம்.
மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டிருப்பதால், விசாரணை நடத்த வேண்டி உள்ளது – காவல்துறை. ஜாமின் மனு மீதான விசாரணை ஜனவரி 28ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.
