Home Uncategorized வடபழனி முருகன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா

வடபழனி முருகன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா

வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு… கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என கோஷங்களுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சென்னை வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் நேரடியாக அனுமதிக்கப்படவில்லை என்பதால் குடமுழுக்கு விழா நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தக் கோயிலில் கடந்த 2007ஆம்ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கின. கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version