தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த அண்ணாமலையின் பாஜக உறுப்பினர் விலகலை, தற்போது அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளரும், தலைமையகப் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது;
இதன்படி, கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழக பாஜகவில் மிகவும் பரபரப்பாகச் செயலாற்றிக் கொண்டிருந்த அண்ணாமலையின் அரசியல் பயணம் அதிகாரப்பூர்வமாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
