10 சக்கரத்திற்கு மேற்பட்ட 700 லாரிகளில் தினமும் கனிமங்கள் கொண்டு செல்லலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி விதித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் கனிமங்கள் கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் மட்டுமின்றி சாலைகளும் பாதிக்கிறது என அரசு தரப்பு தெரிவித்ததையடுத்து, தனி நீதிபதி விதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீடு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
