சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தயாரித்துள்ள இப்படம் குடும்ப பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது.
இது விஜய் சேதுபதி – பாண்டிராஜ் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை பற்றி நித்யா மேனன், “இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் தனித்துவமான அனுபவம். வித்தியாசமான கதாபாத்திரம் என்றால் எனக்கு எப்போதும் பிடிக்கும்” என கூறியுள்ளார்.

