கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைகிறது.
விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
வண்ண மலர் படுகைகள், மலர் சுரங்கப் பாதை, தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, பறவைகள் இடம், வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகளுடன் உருவாகிறது.
ரூ.4,832 கோடி மதிப்பிலான இந்த நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என கடந்தாண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது.

