சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட அனுமதி கோரி ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தாக்கல் செய்த மனு குறித்து, நீதிமன்ற அதிகாரப்பூர்வ அதிகாரிக்கு (Official Assignee) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.இதன் காரணமாக, அதுவரை படத்தின் வெளியீட்டில் சிக்கல் நீடிக்கிறது.

