Friday, May 15, 2026
Homeசெய்திகள்அதிமுகவில் மீண்டும் அதிகாரப் போராட்டம்... EPSக்கு எதிராக நிர்வாகிகள் கிளர்ச்சி!

அதிமுகவில் மீண்டும் அதிகாரப் போராட்டம்… EPSக்கு எதிராக நிர்வாகிகள் கிளர்ச்சி!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக உட்கட்சி மோதல் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளைப் பொறுப்புகளிலிருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது என்றும், அவர்கள் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அதிரடியான கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே கட்சியின் தொடர் தோல்விகளுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அவர்கள், கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைச் சிதைக்கும் வகையில் செயல்படும் ஒரு சிலரால் அதிமுகவின் அடித்தளம் அசைக்கப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், கட்சியின் அவசரக் பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டித் தோல்விக்கான காரணங்களை விவாதிக்க வேண்டும் என்றும், திமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளரின் உத்தரவையே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பகிரங்கமாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது, அதிமுகவில் மீண்டும் ஒரு அதிகாரப் போராட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments