ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு சிறப்புகளும் உள்ளன. ஆனி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியின் பெயர் #பகவதாஷ்டமி. சிவனின் அம்சமாகவும், சிவனே பைரவர் ஆகவும் இருப்பதாக ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன. பைரவர் அவதரித்த நாளான தேய்பிறை அஷ்டமியில் ஒவ்வொரு மாதமும் பைரவ மூர்த்தியை வழிபடுவது வாழ்வில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான இன்னல்களையும் படிப்படியாக போக்கி பெரிய அளவுக்கு முன்னேற்றத்தையும் செழிப்பான வாழ்வையும் கொடுக்கும்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாவது நாள் தேய்பிறை அஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாகவே அஷ்டமி நவமி ஆகிய இரண்டு நாட்களுமே கரி நாட்கள் என்றும், வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு பருவங்களிலும் இந்த இரண்டு நாட்கள் சுப நிகழ்ச்சிகளை செய்வதற்கும் சுபகாரிய பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கும் தவிர்ப்பது உண்டு. அஷ்டமி நவமி ஆகிய இரண்டு நாட்களிலுமே இறைசக்தி அதிகமாக இருப்பதாகவும் இந்த நாட்களில் இடை வழிபாடு செய்வது, நீண்ட நாட்களாக எதிர் கொண்டிருக்கும் தொல்லைகளையும் துன்பங்களையும் போக்க உதவும் என்பது ஐதீகம்.
பகவதாஷ்டமி- ஆனி மாத தேய்பிறை அஷ்டமி
ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு சிறப்புகளும் உள்ளன. ஆனி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியின் பெயர் பகவதாஷ்டமி. சிவனின் அம்சமாகவும், சிவனே பைரவர் ஆகவும் இருப்பதாக ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன. பைரவர் அவதரித்த நாளான தேய்பிறை அஷ்டமியில் ஒவ்வொரு மாதமும் பைரவ மூர்த்தியை வழிபடுவது வாழ்வில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான இன்னல்களையும் படிப்படியாக போக்கி பெரிய அளவுக்கு முன்னேற்றத்தையும் செழிப்பான வாழ்வையும் கொடுக்கும்.
இந்த நாளில் பைரவரை வழிபடுவது அகல்விளக்கில் தீபம் ஏற்றுவது சிவனடியார்களுக்கு அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கும் என்றும் நீண்ட நாட்களாக எதிர்கொண்ட கடன் பிரச்சனை நோய் மற்றும் எதிரிகள் மூலம் தொல்லை உள்ளிட்டவை போகும் என்பதும் ஐதீகம்.
எல்லா சிவாலயங்களிலுமே முதல் பூஜை விநாயகருக்கு நடக்கும். அதே போல ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி என்று பைரவருக்கு பூஜை நடைபெறும். சிவாலயங்களில் இருக்கும் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று அகல்விளக்கில், மிளகை மூட்டையாககே கட்டி, திரியாக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
அதேபோல தேங்காய் உடைத்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றலாம். மேலும், பூசணிக்காயை உடைத்து பூசணிக்காயில் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வரலாம்.
பைரவருக்கு உகந்த வழிபாடாக கருதப்படும் இந்த தீபங்கள் ஏற்றுவதன் மூலமாக வாழ்வில் நீங்கள் எதிர்கொண்டிருக்கும் எந்த வித தொல்லையாக இருந்தாலுமே அது படிப்படியாக நீங்கும். அது மட்டுமில்லாமல் காலபைரவர், சனீஸ்வரனுக்கு குரு என்பதால், ஜாதகத்தில் ஏற்படக்கூடிய கடுமையான சனி தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளிட்டவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பெருமஅளவில் குறையும்.
ஆனி மாத தேய்பிறை அஷ்டமி, ஜூன் 18 புதன்கிழமை மதியம் துவங்கி ஜூன் 19 வியாழக்கிழமை நண்பகல் வரை இருக்கிறது. பொதுவாகவே அஷ்டமி பஞ்சமி நவமி வழிபாடுகள் இரவு நேரத்தில் செய்யப்படும் என்பதால், புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சிவாலயத்தில் உள்ள பைரவரை வழிபடுவது விசேஷமானது.
பைரவர் சனிபகவானின் குரு ஆகையால் பைரவரை வழிபட்டால் சனிபகவான் அருள் கிடைக்கும்.
