மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிப்பதற்காக அரசு பிலிம்ஸ் கோபி என்பவரிடம் நடிகர் விமல் கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாததால், அவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு பிலிம்ஸ் கோபிக்கு வழங்க வேண்டிய தொகையை நடிகர் விமல் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், காசோலை மோசடி வழக்கில் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

