அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவடைந்து, 51வது ஆண்டு இன்று (அக்டோபர் 17) தொடங்குகிறது. இந்நிலையில் உட்கட்சி பிரச்சனையால் 3 அணிகளாக பிரிந்து இந்த ஆண்டு விழாவை கொண்டாடுகின்றனர். பழனிசாமி தரப்பில் கட்சி தலைமை அலுவலகத்திலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திலும், சசிகலா தரப்பில் ராமாவரம் இல்லத்திலும் கொண்டாடுகின்றனர்.
