நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் ஊடரடங்கு அமலில் இருந்து தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று முதல் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
