முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), இனி பயனர்கள் தங்களின் ஐபேடில் (iPad) நேரடியாகவே புதிய கணக்கைத் தொடங்கிப் பயன்படுத்திக் கொள்ளும் அதிநவீன வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு வரை ஐபேடில் வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்றால், முதன்மை ஸ்மார்ட்போனில் இருக்கும் கணக்கை ‘லிங்க்டு டிவைஸ்’ (Linked Devices) முறையில் க்யூஆர் கோடு (QR code) மூலம் ஸ்கேன் செய்து மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் மூலம், எந்தவொரு மொபைல் போனின் துணையும் இல்லாமல், நேரடியாக ஐபேடிலேயே மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி (OTP) சரிபார்ப்பு மூலம் புதிய வாட்ஸ்அப் கணக்கை மிக எளிதாகத் தொடங்க முடியும்.
ஆப்பிள் ஐபேடு பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த அம்சம், ஐபேடிலேயே தங்களின் ஒட்டுமொத்தத் தொடர்புகளையும், அரட்டைகளையும் எவ்விதத் தடையுமின்றித் தனித்து நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
