சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நடத்தி முடித்த தேர்வு இன்று மீண்டும் நடைபெறுகிறது. கடந்த 10 ஆம் தேதி நடந்த தேர்வு மீண்டும் நடக்க உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆங்கில தேர்வில் மாணவர்கள் சரியாக எழுதவில்லை என்பதால் இன்று மீண்டும் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான கூட்டத்தில் மறு தேர்வு நடத்த வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் நலம் கருதி என்று மீண்டும் தேர்வு நடைபெற உள்ளது.
