Sunday, March 15, 2026
HomeUncategorizedசென்னையில் தொடர் மழை -  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் தொடர் மழை –  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில்  தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல, சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments