இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘சேரன் பாண்டியன்’ படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. அதன்பிறகு, ஒரு நல்லெண்ணய் விளம்பரத்தில் நடிக்க அதன்பிறகு நல்லெண்ணய் சித்ராவாகவே அடையாளப்படுத்தப்பட்டார்.
சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா இன்று அதிகாலை மாரடைப்பால் திடீர் மரணமடைந்திருக்கிறார்.
சித்ரா மரணமடைந்திருப்பது அவரது நண்பர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

