புதுக்கோட்டை கம்பன் கழகப்பெருவிழாவில்
டாக்டர். ஜெய ராஜமூர்த்தி அவர்கள் தன் “எழிலுரை”யாக “கம்பன் கண்ட சன்மார்க்கம்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அப்போது தமிழ்கூறும் நல்லுலகில் திருமந்திரம் அருளிய திருமூலர், கம்பன், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் , தாயுமானவர், மற்றும் வள்ளலார் ஆகிய அனைவருமே ” சன்மார்க்க சிந்தனையைப் பரப்பியவர்கள்தான்” என ஆணித்தரமாக தன் கருத்தை பதிவு செய்தார். அவரது உரைவீச்சானது அரங்கத்தினரை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
