பலரும் நீண்ட காலம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த *சபரிமலையில் ரோப் கார் வசதி* விரைவில் அமைய உள்ளது.
இந்த மண்டலகாலத்திலேயே இத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் எனதேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்,
ரோப்வே மூலம் சன்னிதானத்தில் இருந்து பம்பாவை அடைய 10 நிமிடம் ஆகும். 2.7 கிமீ தூரத்தில் அமைய உள்ள இந்த ரோப் கார் திட்டத்திற்கு *250 கோடி ரூபாய் செலவாகும்* என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக *11.12 ஏக்கர் நிலத்தில் ஐந்து கோபுரங்கள்* கட்டப்பட உள்ளது. இந்த மண்டல காலத்திலேயே இதற்கான பணிகளை துவக்கி *18 மாதங்களில் பணிகளை முடிக்க* திட்டமிடப்பட்டுள்ளது
