Home வானிலை “சென்னையில் வெயில் உக்கிரம்”-இன்றைய வானிலை அறிக்கை!

“சென்னையில் வெயில் உக்கிரம்”-இன்றைய வானிலை அறிக்கை!

சென்னையில் கோடைக்காலம் தனது உக்கிரத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. தீபகற்ப இந்தியாவில் பருவக்காற்றின் திசை மாறத் தொடங்கியுள்ளதை வானிலை ஆய்வு மாதிரிகள் காட்டுகின்றன.

இதன் விளைவாகக் கன்னியாகுமரி, கேரளா போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து கோடைக்காலம் முடிவுக்கு வரப்போகிறது.

ஆனால், தீபகற்ப இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சென்னை போன்ற இடங்களுக்கு இதுவே கோடைக்காலத்தின் உண்மையான தொடக்கமாகும்.

மாநிலத்தின் உட்புற மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், மீண்டும் பெய்யத் தொடங்கும் கோடை இடிமழை மக்களுக்குச் சற்றே நிம்மதியையும் குளிர்ச்சியையும் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version