Home செய்திகள் தேர்தல் பிந்தைய ஓய்வு: முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்!

தேர்தல் பிந்தைய ஓய்வு: முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரங்கள் மற்றும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு ஆகியவற்றைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான்கு நாட்கள் ஓய்வெடுப்பதற்காக இன்று மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவர், தற்போது தனது குடும்பத்தினருடன் இந்தச் சிறு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்த முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றடைந்தார்.

தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகக் குடும்பத்துடன் அமைதியாக நேரத்தைச் செலவிட்டுவிட்டு ஏப்ரல் 29 அன்று அவர் மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version