Monday, June 15, 2026
Homeசெய்திகள்தலைமைச் செயலகத்தில் மீண்டும் பழைய நடைமுறை! மக்களுக்கு நேரடி அனுமதி!

தலைமைச் செயலகத்தில் மீண்டும் பழைய நடைமுறை! மக்களுக்கு நேரடி அனுமதி!

இன்று திங்கட்கிழமை காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக வழங்குவதற்காகப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனப் பெருந்திரளான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் வளாகமே பரபரப்பாகக் காணப்பட்டது.

இதற்கு முன்னதாகப் பாதுகாப்புப் பொதுநலன் கருதி, பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்களைத் தலைமைச் செயலகத்தின் வெளிப்புற நுழைவாயிலிலேயே வைக்கப்பட்டிருந்த பிரத்யேகப் பெட்டிகளில் போட்டுவிட்டுச் செல்லும் புதிய நடைமுறை அமலில் இருந்தது; இந்த நடைமுறையால் தங்களது கோரிக்கைகள் உரிய அதிகாரிகளைச் சென்றடைகிறதா என்பதை நேரடியாக அறிய முடியாமல் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், பொதுமக்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் அந்தப் புதிய நடைமுறை தற்போது முழுமையாக மாற்றப்பட்டு, குறைகூற வரும் அனைவரையும் வழக்கம் போல் சோதனைக்குப் பிறகு தலைமைச் செயலக வளாகத்திற்குள்ளேயே நேரடியாக அனுமதிக்கும் பழைய நடைமுறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தால், தங்களது மனுக்களைத் துறை சார்ந்த அதிகாரிகளிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் நேரடியாக ஒப்படைத்து அதற்கான ஒப்புதல் சீட்டையும் உடனுக்குடன் பெற முடிவதால், இன்று மனு அளிக்க வந்த பொதுமக்கள் அனைவரும் மிகுந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments