கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அருணா மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் மன்மோகன் குப்தா தொடர்பான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்க்கொண்டு வருகிறார்கள் .. இந்தியா முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள் ஹெல்த் கிளப்புகள் அமைத்த தல்வால்கர்ஸ் குழுமம் வங்கி மோசடியில் தொடர்பு உள்ளதால் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மன்மோகன் குப்தா மற்றும் நடிகை அருணா ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் என்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆவர். உடற்பயிற்சி கூடங்களுக்கு தேவையான உபகரணங்களை சப்ளை செய்யும் இந்த நிறுவனம் தல்வால்கர்ஸ் குழுமத்திற்கு அவர்கள் உருவாக்கிய உடற்பயிற்சி கூடங்களுக்கு உபகரணங்களை சப்ளை செய்ததாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
