புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்(65) மதுரையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். பல்வேறு சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்டவற்றை எழுதியவர் இந்திரா சௌந்தர்ராஜன்.
மேலும், இவர் மர்மதேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு உள்ளிட்ட புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இவரின் படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
