Home செய்திகள் “மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியே உண்மையான ஜனநாயகம்” – சட்டப்பேரவையில் விஜயின் முதல் உரை!

“மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியே உண்மையான ஜனநாயகம்” – சட்டப்பேரவையில் விஜயின் முதல் உரை!

சட்டப்பேரவையில் முதலமைச்சராகத் தனது முதல் உரையை ஆற்றிய விஜய், “மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களாட்சியே உண்மையான ஜனநாயகம்” என்ற ஆபிரகாம் லிங்கனின் புகழ்பெற்ற வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

தனது அரசு இந்தத் தாரக மந்திரத்தின் அடிப்படையிலேயே செயல்படும் என்று உறுதி அளித்த அவர், மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் தீர்வு காண்பதே இந்த ஆட்சியின் முதன்மை நோக்கம் என்றும் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் உண்மையான அதிகாரம் மக்களிடமே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சரின் இந்த உரை, அவையில் இருந்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எளிமையான வரிகளில் ஆழமான ஜனநாயகக் கருத்தைச் சொல்லித் தனது முதல் உரையைத் தொடங்கியிருப்பது, தவெக ஆட்சியின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

Exit mobile version