Home வானிலை தமிழகத்தில் தொடரும் இடியுடன் கூடிய கனமழை – வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் தொடரும் இடியுடன் கூடிய கனமழை – வானிலை எச்சரிக்கை!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகச் சமவெளிப் பகுதிகளின் பல இடங்களில் நேற்றிரவு பரவலாகக் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

மத்திய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகக் கடலோரப் பகுதியில் தொடர்ந்து நிலவுவதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கும் இடியுடன் கூடிய மழை தொடர்வதற்கான சாதகமான சூழல் காணப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்றைக்கும் மாலை அல்லது பிந்தைய இரவு நேரத்தில் சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரையிலான பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Exit mobile version