Friday, September 18, 2026
Homeசெய்திகள்முடிவுக்கு வந்த ஆளுநர் - அரசு புரோட்டோகால் மோதல்.. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை!

முடிவுக்கு வந்த ஆளுநர் – அரசு புரோட்டோகால் மோதல்.. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதில் ஆளுநர் மாளிகைக்கும் தமிழக அரசுக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த புரோட்டோகால் (Protocol) சர்ச்சை, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விதிமுறை மாற்றத்தின் மூலம் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.

சட்டமன்ற விதிமுறைகளில் செய்யப்பட்ட புதிய திருத்தங்களின்படி, இன்று தொடங்கிய பேரவைக் கூட்டத்தொடர் முதன்முறையாகத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து உடனடியாகத் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

இந்த புதிய நடைமுறையைத் தற்போதைய பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் முழுமையாக ஏற்றுக்கொண்டு தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக, தேசிய கீதத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முந்தைய ஆளுநர் ஆர்.என்.ரவி பிடிவாதமாக இருந்ததால் அரசுடன் தொடர் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், தற்போது சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மேற்கொண்ட சுமுக பேச்சுவார்த்தை மற்றும் விதிமுறை மாற்றங்கள் காரணமாக இந்த நீண்டகாலப் சர்ச்சை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசிற்கும் ஆளுநர் மாளிகைக்குமான புரோட்டோகால் மோதல்களின் ஒரு அத்தியாயம் சுமுகமாக நிறைவடைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments