Home செய்திகள் டெல்லி மக்களின் மனிதநேயம்!..’ஜந்தர் மந்தர்’ முகவரிக்கு குவியும் உணவுகள் – போராட்டக்காரர்களுக்கு அன்பான ஆதரவு!

டெல்லி மக்களின் மனிதநேயம்!..’ஜந்தர் மந்தர்’ முகவரிக்கு குவியும் உணவுகள் – போராட்டக்காரர்களுக்கு அன்பான ஆதரவு!

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்காக டெல்லி நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து உணவுகளை அனுப்பி வைக்கும் நெகிழ்ச்சியான காட்சி ஜந்தர் மந்தரில் அரங்கேறியுள்ளது.

உணவுப் பொட்டலங்களின் மீது அனுப்பியவரின் பெயரோ அல்லது வேறு எந்த தகவலோ இல்லாமல், முகவரியாக வெறுமனே ‘ஜந்தர் மந்தர்’ என்று மட்டுமே குறிப்பிட்டு நாள்தோறும் ஏராளமாக உணவுகள் வந்து சேர்கின்றன. அப்படி வரும் உணவுகள் அனைத்தும் போராட்டம் நடைபெறும் இடத்தில் ஒருபுறமாக ‘பஃபே’ (Buffet) முறையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட, அங்குள்ள போராட்டக்காரர்கள் மட்டுமின்றிப் பசியோடு இருக்கும் எவரும் எவ்விதத் தயக்கமுமின்றித் தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துச் சுவைக்கின்றனர்.

அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, களத்தில் நிற்கும் மனிதர்களின் பசியைப் போக்க வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கில் டெல்லி மக்கள் காட்டி வரும் இந்த பெருந்தன்மையான மனிதநேயச் செயலும், அன்பான உபசரிப்பும் அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது.

Exit mobile version