தமிழ்நாடு அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள், தொழில் முறையாக பயணம் செய்யும் போது, 50% பயணக் கட்டண சலுகை பெறலாம். இதையடுத்து அவர்கள் எடுத்து வரும் இசைக் கருவிகள், தொழில் கருவிகளை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இலவச பயணத்தை, மதுரை, கும்பகோணம், கோவை, சென்னை, விழுப்புரம், சேலம் கோட்ட பேருந்துகளிலும் அனுமதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

