Monday, April 6, 2026
HomeUncategorizedஇன்றைய திருவெம்பாவை | மார்கழி :- 22 |திருப்பள்ளியெளுச்சி

இன்றைய திருவெம்பாவை | மார்கழி :- 22 |திருப்பள்ளியெளுச்சி

அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் 
       அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின் 
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் 
       கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம் 
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
     திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
      அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே … !!!

பொருள்  : —

 அருணன் இந்திரனின் திசையை அடைந்தான். (கிழக்கில்
விடியற்காலையின் செந்நிறம் படர்ந்தது.) அதனால் இருள் அகன்றது.
உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில் கருணையின் சூரியன் 
எழுவதால் உதயமாகின்றது. கண்களைப் போன்ற மணமுள்ள
மலர்கள் மலர்கின்றன. மேலும் அண்ணலே, உங்கள் அழகிய கண்மணி போன்ற வண்டுகள் திரள் திரளாக ரீங்காரமிடுகின்றன. 
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, இதனை உணர்வீர் ! அருளாகிய செல்வத்தைத் தர வரும் மலை போன்ற ஆனந்தம் உடையவனே ! (ஓயாது வந்துகொண்டிருக்கின்ற) 
அலைகடலே ! பள்ளி எழுந்தருள்க ..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments