Tuesday, July 21, 2026
Homeவணிகம்Campus Placement பெற்றவர்களுக்கு அதிர்ச்சி... Offer Letter இருந்தும் வேலை இல்லை!

Campus Placement பெற்றவர்களுக்கு அதிர்ச்சி… Offer Letter இருந்தும் வேலை இல்லை!

இந்தியத் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உத்திகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் தேர்வான இளம் பட்டதாரிகளுக்கு (Freshers) பணி நியமன ஆணைகள் வழங்குவதில் கடும் தாமதம் ஏற்பட்டு வருவதுடன், சில நிறுவனங்கள் தங்களின் வேலைவாய்ப்பு ஆஃபர்களையே திரும்பப் பெற்று வருகின்றன.

ஐபிஎம், அக்சென்சர், காக்னிசண்ட் மற்றும் விப்ரோ போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள், தங்களின் வணிகத் தேவைகள் மற்றும் புராஜெக்டுகளின் வரவைப் பொறுத்தே புதியவர்களுக்கான பணியமர்வு தேதிகள் (Onboarding Dates) இறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளதால், ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் மாதக்கணக்கில் காத்திருக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐந்து ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை தங்களின் ஒட்டுமொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துள்ளதும், பாரம்பரியப் பொதுவான வேலைகளுக்கான (Generic Roles) தேவை குறைந்து வருவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவு (AI), சைபர் செக்யூரிட்டி, டேட்டா இன்ஜினியரிங் மற்றும் டீப்-டெக் போன்ற அதிநவீனத் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட பட்டதாரிகளுக்கே சந்தையில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், வழக்கமான ஐடி நிறுவனங்களின் வளாக வேலைவாய்ப்பு மாடல் முற்றிலும் மாறி, புதியவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments