Saturday, July 4, 2026
Homeஉலகம்நள்ளிரவு திருட முயன்ற கும்பலுக்கு அதிர்ச்சி… பேக்கிங் டேப்பால் கட்டி மடக்கிய வீட்டு உரிமையாளர்!

நள்ளிரவு திருட முயன்ற கும்பலுக்கு அதிர்ச்சி… பேக்கிங் டேப்பால் கட்டி மடக்கிய வீட்டு உரிமையாளர்!

இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா நகரில் நள்ளிரவில் திருடும் நோக்கில் ஒரு வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட திருட்டுக் கும்பலை, விழித்துக் கொண்ட வீட்டு உரிமையாளர் மற்றும் அண்டை வீட்டார் இணைந்து சாதுரியமாகப் மடக்கிப் பிடித்து, பிளாஸ்டிக் பேக்கிங் டேப் (Packing Tape) மூலம் கைகால்களை அசக்க முடியாதபடி மம்மி போல ஒட்டிச் சுருட்டி வைத்த விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலத்த சிரிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தப்பி ஓட முயன்ற திருடர்களைப் பொதுமக்கள் தர்ம அடி வெளுக்காமல், சுவர்களில் பெட்டிகளை ஒட்டுவதற்குப் பயன்படுத்தும் தடிமனான பிரவுன் நிற பேக்கிங் டேப்பைக் கொண்டு தலை முதல் கால் வரை மொத்தமாகச் சுற்றி தரையில் படுக்க வைத்ததுடன், போலீஸார் சம்பவ இடத்திற்கு வரும் வரை அவர்களை அசையக் கூட விடாமல் அப்படியே காவல் காத்துள்ளனர்.

திருடர்கள் நால்வரும் உடம்பைச் சுற்றிலும் டேப் ஒட்டப்பட்ட நிலையில் தரையில் மண்டியிட்டுப் பரிதாபமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகி வரும் வேளையில், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடாமல், வினோதமான முறையில் திருடர்களைக் கட்டிப்போட்ட அண்டை வீட்டாரின் இந்த நூதனச் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டித் தீர்த்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments