பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த முக்கியச் சந்திப்பின் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்த தனது கருத்துகளையும், கட்சியை விட்டு விலகி அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வது (Move on) தொடர்பான தனது இறுதி முடிவையும் அவர் அவர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமைக்கு எவ்வித மரியாதைக்குறைவையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், சுமுகமான முறையிலேயே (Cordial terms) இந்த வெளியேற்றம் அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவை அடுத்து, அவசர அவசரமாகப் பரிசீலித்த பாஜக மேலிடம், இதுகுறித்து இறுதி முடிவெடுக்கும் முன் இன்னும் ஒரு நாள் மட்டும் பொறுமையுடன் காத்திருக்குமாறு (Wait for a day) அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால், அண்ணாமலை தனது அரசியல் எதிர்காலம் குறித்த இறுதி முடிவை நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

