டிசம்பர் 10 அன்று, தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தின் மகாசன்னிதானம் அவர்களுக்கு ஈஷா யோக மையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு ஆசிரமம் முழுவதும் சுற்றிக் காண்பிக்கப்படது. தியானலிங்கத்தில் தியானத்தில் ஈடுபட்ட மகாசன்னிதானம் அவர்கள், சிறப்பு ஆதியோகி திவ்ய தரிசனத்திலும் கலந்துகொண்டார்.
