மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்த சென்றார். இதற்காக அவர் அதிமுக கொடி பொருத்திய காரில் மெரினா கடற்கரை சென்றார். அப்போது, தொண்டர்கள் வாழ்க கோஷம் எழுப்பினர்.
இதேபோல நாளை காலை 10.30 மணியளவில் சசிகலா, சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்று எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கும் சசிகலா செல்கிறார்.
