Home Uncategorized புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக் கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி

புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக் கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும். 

மேலும் ஆஞ்சநேயருக்கு முக்கிய விசேஷ நாட்களில் தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி, சந்தன காப்பு, வெண்ணை காப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். இதில் உள்ளூர் மட்டும் இன்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

Exit mobile version